பரபரப்பு பேச்சு! விஜய் பேசுன பேச்சுக்கு... ஓங்கி மூஞ்சிலேயே ஒரு குத்து விடணும்னு தோணுது...! - பாஜக ரஞ்சித்
Vijays speech I feel like punch at his face BJP Ranjith
கோவை மாவட்டம் துடியலூர் சந்திப்பில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி 'ஊர்வலம்' தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் 'ரஞ்சித்' பங்கேற்று உரையாடினார்.அப்போதும் அவர் தெரிவித்ததாவது," இங்கு எல்லா கடவுளும் ஒன்றுதான், வழிபடும் விதம் தான் வேறு வேறு.அண்மையில் மதுரை மாநாட்டுல தம்பி விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன்.

பிழைப்பு தேடி வரவில்லைனு பேசியிருக்கிறார். அப்படியென்றால் அவர் யாரை பார்த்து அதனை சொல்கிறார். எம்.ஜி.ஆரையா, ஜெயலலிதாவையா? இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா? இல்ல கமல் ஹாசனையா?.மேலும், மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார்.
இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று தெரிவிக்கிறார்.அப்போ கடந்த காலத்தில் விஜய், பிரதமரை சந்தித்தது எதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? அல்லது கல்வியை சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா?
அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? எதுவும் இல்லை தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து கையை சொடக்கு போட்டு பேசுகிறார்.தம்பிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாறி மறந்துட்டாருனு நினைக்கிறேன்.
அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச அருகதை இல்லை.முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்க இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்னு தோணுது" என்று தெரிவித்தார்.
இவர் இவ்வாறு தெரிவித்துள்ளது விஜயின் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது சர்ச்சையாக வெடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Vijays speech I feel like punch at his face BJP Ranjith