விஜயகாந்தின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்த்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று  2011ல் நான் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதே வலியுறுத்தியிருந்தேன்.  சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் தான் முதல் முறையாக கோரிக்கை வைக்கப்பட்டது.  மேலும் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக் கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டோம்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் நேற்று முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்த தமிழக அரசுக்கும், முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதால் தமிழக மக்களுக்கு நேரில் காணும் வாய்ப்பு அமையும். சட்டசபை நிகழ்வுகளை தொடர்ந்து நேரலை செய்ய வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth praise to mk stalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->