தலித்துகள் படும் பாட்டிற்கு இதெல்லாம் தேவையா? திமுக ஆதரவு சுகபோக வாழ்க்கை வாழத்தானா? திருமாவளவனுக்கு வந்து விழுந்த நறுக் கேள்வி!
vCK THIRUMAVALAVAN mARIYA trichy perani
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மதசார்பின்மை காப்போம் என்ற தலைப்பில், திருச்சியில் நாளை டிவிஎஸ் டோல்கேட் பகுதி முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பேரணி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து மலர்களை தூவ திருச்சி காவல் ஆணையர் காமினியிடம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு காவல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், பிரபல சமூக செயற்பாட்டாளர் சலீன் மரியா லாரன்ஸ், இந்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் தினம் தினம் தலித்துகள் படும் பாட்டிற்கு இதெல்லாம் தேவையா? தலித்துகள் என்னா ஆனாலும் கவலைப்படாமல் திமுகவிற்கு ஆதரவு கொடுப்பது, தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழத்தானா?
எங்கே இதையெல்லாம் கேள்வி கேட்டு விட போகிறார்கள் என்கிற அச்சத்தில் தான் கால் வலி, கை வலி, தியாக வாழ்வு என்று தினம் தினம் பிரச்சாரம் செய்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
vCK THIRUMAVALAVAN mARIYA trichy perani