முன்னாள் முதலமைச்சர் கவலைக்கிடம்.! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.!
uttar pradesh ex cm kalyan singh in icu
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண சிங் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1932 பிறந்த கல்யாண் சிங், உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற மக்களை உறுப்பினராக 2009 - 2014 ஆண்டுகளில் இருந்துள்ளார்.
மேலும், பின்னர் 4 செப்டம்பர் 2014 முதல் - 8 செப்டம்பர் 2019 வரை இராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் கல்யாண் சிங் இருந்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த போதும் கல்யாண் சிங் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த அன்றே தனது முதலமைச்சர் பதவியை கல்யாண் சிங் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், கல்யாண் சிங்குக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, கடந்த 4-ந் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா நோய்த்தொற்று மற்றும் சுயநினைவு குறைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "கல்யாண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் அவருக்கு உயிர் காக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், அவருக்கான சிகிச்சை முறைகளை மருத்துவமனை இயக்குனர் திமான் நாள்தோறும் கண்காணித்து வருகின்றார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
uttar pradesh ex cm kalyan singh in icu