#BigBreaking || போர் பதற்றம் :இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் - அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று, இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் - ரஷ்ய நாட்டு எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்தியர்கள் யாரும் அவசியம் இன்றி உக்ரைன் நாட்டுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைன் நாட்டில் தங்கி உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரேனில் நாளை ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்திய தூதரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine Russia war Fear


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->