வார்த்தை மோதலால் அலறும் அரசியல் களம்...! 'டம்மி முதல்வர்... ஜோக்கர் அமைச்சர்கள்' என ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி கடும் தாக்கு...!
Udhayanidhi strongly calling them dummy chief minister joker ministers in protest
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். கே.என்.நேரு வரவேற்புரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், குறுவை சாகுபடி பாதிப்புக்கும், டெல்டா விவசாயிகளின் நெருக்கடிக்கும் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
காவிரி பிரச்சினையில் முதலமைச்சர் விஜய் உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்றும், கர்நாடக அரசுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்கத் தவறிவிட்டார் என்றும் விமர்சித்தார்.
மேலும், விவசாயிகள் துயரத்தில் இருக்கும் நிலையில் ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதை விட விளம்பர அரசியலில் கவனம் செலுத்துவதாகவும், காவிரி விவகாரத்தில் தி.மு.க. மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் கலைத்து, விவசாயிகளின் நலனையும் மாநிலத்தின் நீர்வள உரிமையையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
English Summary
Udhayanidhi strongly calling them dummy chief minister joker ministers in protest