04 ஆண்டுகளில் 18.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: உதயநிதி ஸ்டாலின்..!
Udhayanidhi Stalin says over 18 lakh people have been granted pattas in 4 years
தமிழகத்தில் கடந்த 04 ஆண்டுகளில் 18.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், மகளிர் விடியல் பயணம் மூலம் இதுவரை 770 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்றும், காலை உணவு திட்டத்தில் 22 லட்சம் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தால் இதுவரை 08 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். அத்துடன், மகளிர் உரிமை தொகை திட்டத்தால் மாதம் 01 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றதாகவும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் தரப்பட்ட மனுக்களில் 40% பேர் உரிமை தொகை கேட்டு மனு. விடுபட்ட மற்றும் தகுதியான மகளிருக்கு உதவி தொகை நிச்சயம் வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin says over 18 lakh people have been granted pattas in 4 years