சம்பவம் செய்த அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியில் இருந்து நீக்கம்.! ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர் பாசறை தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி அதிமுகவின் தலைமை உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சை அருகே மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று வேல்முருகன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள தஞ்சை, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 2 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர் பாசறை தலைவர் வேல்முருகன் மற்றும், தர்மபுரி ஐ டி பிரிவு செயலாளர் வேலவன் ஆகிய இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்கள்.

மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சை நிர்வாகி வேல்முருகனும், பணம், நகைக்காக கொலை செய்த தருமபுரி நிர்வாகி வேலவனும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுகவின் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two member dismissed in aiadmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->