திருவண்ணாமலையில் தொப்பி அம்மாவுக்காக காத்திருந்த தினகரன்..! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், அமமுக கட்சித் தலைவருமான டி டி வி தினகரன், திருவண்ணாமலை சென்று வந்த பிறகே எந்த முடிவையும் எடுப்பார். அது அரசியலோ அல்லது சொந்த விஷயமோ எதுவாக இருந்தாலும் அண்ணாமலையாரை தரிசித்த பிறகே முடிவெடுப்பார்.

அதோடு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தங்கியிருந்த "மூக்குப்பொடி சித்தர்" என்ற சாமியாரையும் தரிசித்து அவரின் ஆசி பெற்ற பிறகு தான் எதையும் துணிந்து செய்வார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2018ம் ஆண்டு மூக்குப்பொடி சித்தர் இறந்து விட்டதால், அதன்பிறகு அவரது நினைவிடத்திற்குச் சென்று தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் தினகரன்.

இந்நிலையில் சமீப காலமாக தொப்பி அம்மா என்ற ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலும், ஆசிரம வாசலிலும் படுத்துக் கிடக்கிறார். அவரை பெண் சித்தர் என்று கூறி சிலர் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கினர். இதையடுத்து பலரும் அவரைத் தேடித் சென்று வணங்குவது, உணவு கொடுப்பதுமாக உள்ளனர். அவர் சாப்பிட்டு மீதி வைக்கும் உணவுகள், டீ, காஃபி ஆகியவற்றை பிரசாதமாக நினைத்து பலரும் முட்டி மோதி உண்கின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்த டி டி வி தினகரனும் தொப்பி அம்மா பற்றி அங்குள்ளவர்கள் மூலம் கேள்விப்பட்டு நீண்ட நேரமாக அவருக்காக காத்திருந்து, அவர் வந்ததும் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கியுள்ளார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran waited for Thoppi Amma in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->