மும்பையை உலுக்கிய சம்பவம்; ''மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன்''; விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் பகீர் தகவல்; பின்னணியில் தீவிரவாத தொடர்பா..? - Seithipunal
Seithipunal


நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை அன்று இஸ்லாமியர்களின் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி, மும்​பை​யில் ஊர்​வலம் நடைபெற்​றது. அப்போது ரே ரோடு பகு​தி​யில் உள்ள ரஹ்ம​தா​பாத் மயானத்துக்கு அரு​கில் நடை​பெற்ற ஊர்​வலத்​தில் பங்கேற்றவர்களுக்​கு, ஒரு​வர் மாத்திரையை (கேப்சூல்) விநியோகித்​துள்​ளார். 

இவர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்​டு, அந்த மாத்​திரைகளை வலி நிவாரணி மற்​றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்​திரைகள் என்று கூறி கூட்டத்தில் கொடுத்துள்ளார்.

ஆனால், இதனை பார்த்து சந்​தேகமடைந்த ஒரு பெண் போலீ​ஸில் புகார் செய்துள்ளார். புகாரையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீ​ஸார் மாத்திரைகளை விநி​யோகித்த பயாஸ் பிரேம்ஜி என்​பவரை கைது செய்​தனர். 

பின்னர் அவரை போலீஸ் காவலில் வைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இந்த சூழலில், இந்த மாத்​திரைகளை வாங்கி உட்​கொண்ட 11 பேர் உடல்​நலக்​குறைவு ஏற்​பட்டு உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். துரிதமாக செயல்பட்டதால் தற்​போது அவர்​கள் அனை​வரும் ஆபத்​தான கட்​டத்​தைத் தாண்​டி​யுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல் துணை ஆணை​யர் ஜெயந்த் மீனா தெரிவித்துள்ளதாவது;

"பு​காரின் பேரில் மாத்​திரைகளை விநி​யோகித்த பயாஸை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிட​மிருந்து 14,900 மாத்​திரைகளைப் பறி​முதல் செய்​தனர். அந்த மாத்திரைகளில் எலி விஷம் மற்​றும் பிற பூச்​சிக்​கொல்​லிகளில் பயன்​படுத்​தப்​படும் ‘ஜின்க் பாஸ்​பைடு' என்ற மிக ஆபத்​தான வேதிப்​பொருள் கலக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது'' என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த நபர் 30,000 வெற்று கேப்சூல்​களை​யும், 50 கிலோ பாஸ்​பரஸை​யும் ஆர்​டர் செய்​திருந்​தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், ஊர்வலத்​தில் பங்​கேற்ற ஆயிரக்​கணக்​கான மக்​களைக் கொல்வதே தனது நோக்​கம் என்று விசா​ரணை​யின்​போது பயாஸ் ஒப்​புக்​கொண்​டுள்ளதாக மும்பை மாநகர காவல் துணை ஆணை​யர் ஜெயந்த் மீனா தெரிவித்துள்ளார்.

பிபிஏ பட்​ட​தா​ரி​யான இந்த நபர் அடிக்​கடி வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளதாகவும், குறிப்​பாக, அவர் இதற்கு முன்பு ஈரான் மற்​றும் இராக் நாடு​களுக்​குச் சென்று வந்துள்​ளதாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதையடுத்​து, பயாஸ் மீது பைகுல்லா காவல் நிலை​யத்​தில் பாரதிய நியாய சன்​ஹிதா (பிஎன்​எஸ்) பிரிவு 123-இன் கீழ் (குற்​றம் செய்​யும் நோக்​கத்​துடன் விஷம் போன்​றவற்​றால் காயம் ஏற்படுத்துதல்) வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தச் சதி​யின் பின்னணி​யில் ஏதேனும் தீவிர​வாதத் தொடர்பு உள்​ளதா என்பது குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தி வருவதாக மும்பை மாநகர காவல் துணை ஆணை​யர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man arrested with poison pills allegedly planning to kill 15000 people during Muharram procession in Mumbai


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->