எங்கே கனிமொழி? புறக்கணிப்பா? துணை முதல்வர் உதயாநிதி கொடுத்த பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்கு தடையின்றி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகம் முழுவதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு திட்டங்கள்  செயல்படுத்தப்படும் விதம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், மக்களுக்கு சீரிய முறையில் அரசின் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளை உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டார்.

மேலும், பொதுமக்களிடம் பெறும் மனுக்களை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம், இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி, "அவசர வேலையாக வெளிநாட்டிற்கு சென்றதால் தூத்துக்குடி ஆய்வுக்கூட்டத்தில் எம்.பி கனிமொழி பங்கேற்கவில்லை. நான் அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன். இனி நடக்கும் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வர்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi DMK MP Kanimozhi DyCM Udhay


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->