தமிழகத்தில் சாதி சண்டையை தூண்டி விடும் திருமாவளவன்.! கொந்தளிப்பில் தமிழகம்.!
thirumavalavan worst talk
தமிழகத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் சாதிவெறியை தூண்டிவிட்டு, சாதி சண்டைகளுக்கு வழி வகுப்பதாக, திருமாவளவன் மீது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று பதிவிட்டுள்ள அனைத்து பதிவுகளிலும் சாதி வெறியர்கள்., சாதி வெறியர்கள்., சாதி வெறியர்கள்., என்று தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள கருத்துகளின்படி,
"தமிழகத்தில் ஏதோ இரண்டு கட்சியினர் மோதிக் கொண்டால் அவர்களை சாதிவெறியர்கள் என்று ஒரு மாய பிம்பத்தை தொல் திருமாவளவன் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.
இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் வாக்குவாதத்தை கூட., சாதி வெறியர் என்று திருமாவளவன் சொல்லி வருகிறார். ஒரு தரப்பு மட்டும் சாதி வெறியர் என்றால்? மற்றொரு தரப்பு சாதி வெறியர் இல்லையா?
திருமாவளவன் கூறுவது போல் தாழ்த்தப்பட்ட மக்களால் மற்ற சமூகத்தினர் தாக்கப்படும்போது இதே வார்த்தையை திருமாவளவன் ஏன் பயன்படுத்தவில்லை?
தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த ஒரு குற்ற செயலை செய்தாலும்., அதை நியாயப்படுத்தும் விதமாக தனது அமைதியைக் காக்கும் திருமாவளவன், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்ற உடனேயே சாதிவெறியர்கள்., சாதி வெறியர்கள்., என்று தொடர்ந்து குறிப்பிட்ட வருவது.,
உண்மையில் சாதிவெறி திருமாவளனுக்கு தான் உள்ளது. சாதியை வைத்து அரசியல் செய்ய எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருப்பது போல் உள்ளது திருமாவளவனின் இந்த முரண்பாடு.
தமிழகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் விதமாக., இரு கட்சியினர் மோதலை சாதிவெறி என்று திருமாவளவன் கூறுவது., உண்மையில் அவருக்கு சாத்திய மனநோய் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த சிலர்., 'வன்னியர் சாதி வெறியர்கள்' என்று குறிப்பிட்டு ஒரு சமூகத்தை இழிவு படுத்தி வருகின்றனர். இது படு மோசமான விளைவுகளை உண்டாக்கலாம். உண்மையில் இவர்களுக்கு சாதிவெறி இல்லை என்றால்இவர்களின் வாயில் இருந்து ஏன் வன்னியர் என்ற சாதி பெயர் வர வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சாதி வெறியர்கள்., சாதி வெறியர்கள்., என்றால் திருமாவளவனுக்கு சாதி இல்லையா? சாதி பற்றுதான் இல்லையா?
தலித் என்ற பிரிவில் யாருக்கும் சாதி இல்லையா?. இதேபோல் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சாதி சண்டைகள் இல்லை என்பதை திருமவளவானளால் மறுப்பு கூற முடியுமா? தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள சாதிகளுக்கு உள்ளே ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அவரால் மறக்க முடியுமா?" என்று சமூகம் சமூகவலை தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
thirumavalavan worst talk