முகநூலில் சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்ட நபர் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


சிறுமிகளின் புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பிரகாஷ் என்ற நபர், அந்த பகுதியில் வசிக்கின்ற சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முகநூலில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை பார்த்த சிலர், சிறுமிகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் தவறான முறையில் பயன்படுத்தியதாக, அருண் பிரகாஷ் மீது தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார்  விசாரணை மேற்கொண்டதில், அருண் பிரகஷ் எந்த அனுமதியும் இல்லாமல் சிறுமிகளின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டது உறுதியானது.

இதனையடுத்து அருண் பிரகாஷ் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thanjai arun prakash arrest


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->