ஓ.பி.எஸ்யை போல 'கிருஷ்ணசாமி'கள்... மீண்டும் பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவரது பெயரில் 4 பேர் அதே பகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதே போல் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இதற்காக அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது பெயரை போலவே 4 பேர் நேற்று சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். 

இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரைக் கொண்ட 5 பேர் மனுதாக்கல் செய்துள்ளது மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi constituency 5 Krishnaswamy petitions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->