டாஸ்மாக் முறைகேடு: என்ன இது? இதான் ஆதாரமா? அமலாக்கத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய உயர்நீதிமன்றம்!
TASMAC Scam ED Raid in chennai HC
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், மே 16 அன்று திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பின்னர் அவை சீலிடப்பட்டன. இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை, விசாரணை நடத்தப்பட்ட தளவாடங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ததைக் கொண்டு, நீதிபதிகள் அதிலுள்ள தகவல்கள் போதாது எனக் கூறி, முறைகேடுக்கு இருவருக்கும் தொடர்பு உள்ளதை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
மேலும், வீடுகள் மற்றும் அலுவலகங்களை சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு எந்த சட்ட அடிப்படை உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதிகள் பரிசீலனை செய்தனர். அதன்பின், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கிடையே தொடர்பு இல்லை எனக் கூறி, விசாரணையை மதிய உணவுக்குப் பிறகு ஒத்திவைத்தனர்.
English Summary
TASMAC Scam ED Raid in chennai HC