புகழாரம்! தமிழ் இதயத்துடிப்பாய் என்றும் வாழும் முத்தமிழ் கலைஞர்...! - உதயநிதி - Seithipunal
Seithipunal


இன்று மறைந்த திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்த நாளை கருணாநிதியின் தமிழ்ப்பற்றின் பெயரில் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா தொண்டர்களால் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும்,கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பக்கத்தின் பதிவில் தெரிவித்திருந்ததாவது, "தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பெருமையை உரைக்கச் சொல்லும் வகையில் இந்த செம்மொழி விழா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil heartthrob who will always live on Udhayanidhi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->