ஸ்டாலினுக்கே, அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்.! நடுநடுங்கி போன திமுக தலைவர்.!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா என்ற 32 வயது இளம்பெண் ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துவதாக கூறி பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டி இருக்கிறார். 

அதன்படி நேற்று அவர் கத்தியுடன் முத்தாலம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவில் பூட்டப்பட்டிருந்தால் கோவில் வாசலில் நின்றவாறு தனது நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்துள்ளார். சற்று நேரத்தில் ரத்தம் அதிகமாக வந்ததால் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

அத்துடன் நாக்கையும் போலீசார் வந்து எடுத்துச் சென்றனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். இத்தகைய சூழலில், இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விஷயத்தை கேள்விப் படும்போது எனது விழிகள் குளமாகின. 

திமுகவை சேர்ந்த யாரும் இதை ஆதரிக்க கூடாது. இது எத்தனை நடுங்க வைத்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பணியாற்றுவதை தான் காணிக்கையாக வைத்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் எனக்கு மன காயம் உண்டாகும். வனிதா விரைவில் நலம் பெற விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

stalin sad about paramakkudi vanidha


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->