விஜயலட்சுமி விவகாரம் || கைதாகிறாரா சீமான்?! ஊட்டிக்கு விரைந்தது தனிப்படை! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3 நாட்களாக நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சமரசம் முயற்சியில் திருப்தி அளிக்காததால் மீண்டும் நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் குற்றவியல் நடைமுறை சட்டம் 164ன் படி திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள போலீசார் ராமாபுரம் மற்றும் மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். 

இந்த நிலையில் சீமான் இன்று பிற்பகல் உதகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜயலட்சுமி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இதற்கிடையே இன்று பிற்பகல் விருகம்பாக்கம், மதுரவாயில், வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட சிறப்பு தனி படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்தி, கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special force going to Ooty to arrest Seeman in Vijayalakshmi case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->