முதல்வர், திமுக, தலைமை தளபதி குறித்து அவதூறு பரப்பியதற்காக ஷிபின் என்ற நபர் கைது.! - Seithipunal
Seithipunal


மீன் விற்பனை செய்யும் பெண்மணியை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட விவகாரம் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில் அவதூறு கருத்தை பின்னூட்டமாக பதிவிட்ட கன்னியாகுமரி புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், தலைமை தளபதியின் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தியை பரப்பிது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை, பந்திரபரம்பு பகுதியை சேர்ந்த ஷிபின் (வயது 24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் மீது 153A, 505/1 b, 504 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து ஷிபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பித்து நீதிபதி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SHIBIN ARRESTED


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->