தேசியவாத காங்கிரஸ் மீண்டும் இணைகிறதா? பாஜக கூட்டணி உடைக்கிறதா? சரத் பவார் விளக்கம்!
Sharad Pawar Breaks Silence NCP Merger Border Security
மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, தேசியவாத காங்கிரஸ் (NCP) நிறுவனர் சரத் பவார் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். அஜித் பவாரின் மறைவு மற்றும் சுனேத்ரா பவாரின் நியமனம் குறித்துப் பேசிய அவர், அரசியல் முடிவுகளை விடத் தற்போது ஒற்றுமையே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
கட்சி இணைவு குறித்து சரத் பவார்:
சுனேத்ராவுக்கு வாழ்த்து: சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்றதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
இணைப்புப் பேச்சுவார்த்தை: இரு பிரிவுகளையும் இணைப்பது குறித்து மறைந்த அஜித் பவாருக்கும், ஜெயந்த் பாட்டிலுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான்.
பட்னாவிஸ்க்கு கேள்வி: "இந்த விவகாரத்தில் முதல்வர் பட்னாவிஸ் ஈடுபடவே இல்லை; அப்படியிருக்கையில் இணைவு பற்றிப் பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?" எனச் சரத் பவார் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய நிலை: இப்போது துயரத்திலிருப்பவர்களைக் கவனிப்பதிலும் முன்னேறிச் செல்வதிலும்தான் முழுக் கவனமும் உள்ளது; அரசியல் ரீதியான விவாதங்கள் தற்போது நடைபெறவில்லை.
சீன எல்லை விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவு:
நாடாளுமன்றத்தில் சீன எல்லை குறித்து ராகுல் காந்தி எழுப்பிய வினாக்களுக்குச் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார்:
அதில் "முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நரவனே ஒரு அறிக்கையை வெளியிடும்போது, அதனை எதிர்க்கட்சித் தலைவர் அவையில் குறிப்பிட்டால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கவலைக்குரிய விஷயம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Sharad Pawar Breaks Silence NCP Merger Border Security