வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள செல்வப்பெருந்தகை..!
Selvaperunthagai Releases Evidence of the Raid Conducted by Income Tax Officials
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரைக்காக தமிழகம் வந்திருந்தார். அப்போது படப்பையில் உள்ள தனது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 'சோதனை' நடத்தி தன்னை முடக்கி வைத்திருப்பதாக செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கான ஆதாரமாக புகைப்படத்தை காட்டியுள்ளார்.
அடப்போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்தும், வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Selvaperunthagai Releases Evidence of the Raid Conducted by Income Tax Officials