ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வாலின் பிரிவு உபசார நிகழ்ச்சி: 'பணியாற்றிய அனைத்து துறையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்'; டிஜிபி மகேஷ்குமார் புகழாரம்..!
DGP Mahesh Kumar praises IPS officer Seema Agarwal for her outstanding contribution in all areas of her career
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வாலின் பணிக்காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீமா அகர்வால், காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். விழாவில் சீமா அகர்வாலுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில் கூறியதாவது;
சீமா அகர்வால் மூத்த அதிகாரி மட்டுமல்ல, அவரின் மனிதாபிமானமிக்க அணுகுமுறை அவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தியுள்ளதாக புகழாரம் சூட்டினார். அத்துடன் எந்த பிரிவில் பணியாற்றினாலும் அதில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்தவர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சீமா ரயில்வே ஐஜியாக இருந்தபோது விபத்துகளை தடுக்க அதிக நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, காவல்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளை சேர்ந்தவர்களாலும் மதிக்கப்பட்டவர் என்று கூறினார்.

இவரை தொடர்ந்து சீமா அகர்வால் பேசும்போது கூறியத்தவது; சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவு அல்லாமல் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும்போது தனக்கு தெளிவான பார்வை கிடைத்ததாக தெரிவித்தார். அத்துடன், ''தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கு உறுதுணையாக இருக்க முடியுமா, பொதுமக்களிடம் கனிவாக இருக்க முடியுமா என்பது குறித்து நீங்களே உங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மக்களுக்கு சிறப்பான சேவையாற்ற வேண்டும்'' என்று கூறினார்.
English Summary
DGP Mahesh Kumar praises IPS officer Seema Agarwal for her outstanding contribution in all areas of her career