மாமல்லபுரம் மீனவர்குப்பம் கடற்கரையில் திடீர் கடலரிப்பு: மீனவர்கள் அச்சம்..! - Seithipunal
Seithipunal


மாமல்லபுரம் மீனவர்குப்பம் கடற்கரையில் 02 அடி உயரத்துக்கு திடீர் கடலரிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். அதாவது, மாமல்லபுரத்தில் இருந்து புதிய கல்பாக்கம் மீனவர்குப்பம் பகுதி வரை உள்ள மீனவ குப்பங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதான தொழிலாக  மீன்பிடி தொழில் விளங்கி வருகிறது.

இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினமும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை மாமல்லபுரம் மீனவர்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ குப்பம் கடற்கரையில் சுமார் 02 அடி உயரத்துக்கு திடீரென கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடற்கரையையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது மீன்பிடி படகுகளை மீனவர்கள் வேறொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று நிறுத்தி வைத்துள்ளனர். இந்த திடீர் கடலரிப்பால் மீனவர்கள் அச்சமடைந்தா நிலையில், இந்த திடீர் கடலரிப்பால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden sea erosion at Mamallapuram Meenavarkuppam beach


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->