நொளம்பூரில் பயங்கரம்; லாரியில் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு; இளைஞர் கொலை; தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு..!
Youth killed in a dispute while collecting water from a lorry in Nolampur
சென்னை நொளம்பூர் பகுதியில் லாரியில் வரும் தண்ணீரை பிடித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒரு கொலை செய்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொளம்பூர் யூனியன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ் (50). இவர் தனது மனைவி செல்வி, மகன்கள் சஞ்சய் (25), சரத்குமார் (27) ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சரத் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீட்டினருகே லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த உதயா என்பவர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் சஞ்சய் மற்றும் சரத் ஆகிய இருவரும் உதயாவை கையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து, உதயா தனது சகோதரர்கள் கார்த்திக், ராகேஷ் மற்றும் சில நண்பர்களுடன் சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரின் வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கத்தியால் தாக்கியுள்ள்ளனர். தடுக்க வந்த முருகதாஸையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த காயமடைந்த 03 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே சஞ்சய் உயிரிழந்துள்ளார். சரத் மற்றும் முருகதாஸ் ஆகியோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முருகதாஸின் மனைவி செல்வி, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் உதயா மற்றும் அவருடன் வந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பில், நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 03 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரூபேஷ் என்பவரை பிடிக்கும் போது, அவர் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். இதனால் போலீஸார் தற்காப்புக்காக ரூபேஷை கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
அத்துடன், இவ்வழக்கில் தொடர்புடைய ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (24), மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் (21), சூர்யா (20), கார்த்திக் ராஜா (28), ராகேஷ் ராஜா (26), மேஷாக்(22), சூர்யபிரகாஷ் (27) ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
English Summary
Youth killed in a dispute while collecting water from a lorry in Nolampur