திமுக ஆட்சி நடந்தாலும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி பற்றித்தான் மக்கள் புகழ்ந்து பேசுகிறார்கள் - செல்லூர் ராஜு.! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தாவது, "அதிமுகவின் புண்ணிய ஸ்தலம் எம்ஜிஆர் மாளிகை. அங்கு நடந்த வன்முறை நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஓ பன்னீர்செல்வம் தான் செய்வது எல்லாம் சரி என்று நினைத்து, ஏட்டிக்கு போட்டியாக செயல்படக் கூடாது. அதிமுகவில் சாதி, மதம் பார்ப்பதில்லை. அனைவருமே ஒரு தாயின் பிள்ளையாக செயல்படுகிறோம்.

அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலை போக மாட்டார்கள், நாங்கள் எம்ஜிஆரின் தொண்டர்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க சட்டம் திருத்தங்களை எடப்பாடி பழனிசாமி இயற்றியுள்ளார்.

கொரோனா காலத்திலும், பொங்கல் நாட்களிலும் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு அள்ளி, அள்ளி கொடுத்தார். திமுக ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை தான் மக்கள் என்றும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

டாக்டர் கலைஞர் நூலகத்தை பார்ப்பதற்காக மட்டும்தான் மதுரைக்கு அமைச்சர்கள் வந்து செல்கிறார்கள். மற்றபடி இங்கு ஒரு வளர்ச்சி திட்டங்களும் செய்யப்படுவதில்லை" என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju say about eps july


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->