#BREAKING || எங்களால் தலையிட முடியாது.. கை விரித்த உச்ச நீதிமன்றம்... அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ ன.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்கும்போது பொதுக்குழு கூட்டி பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கப்பட்டது அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்றும், அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கியது செல்லாது வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எவ்வாறு தடை விதிக்க முடியும் என கேள்வி அதோடு ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc refused ops appeal petition


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->