நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்! மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
Saudi bus accident DMK MK STalin ADMK EPS Condolence
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்கள் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்கள் பயணம் செய்த பேருந்து சவுதி அரேபியாவில் கோர விபத்தில் சிக்கியது. மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நோக்கிச் சென்றபோது, ஜோரா என்ற இடத்தில் பேருந்து மீது டீசல் லாரி மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்தத் துயர விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 சிறுவர்கள் உட்பட மொத்தம் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒரு பயணி மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்துத் தமிழகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், "மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்த இரங்கல் செய்தியில், "தெலங்கானா மாநிலத்திலிருந்து புனிதப் பயணம் மேற்கொண்டு சென்ற 42 இந்தியர்கள் விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Saudi bus accident DMK MK STalin ADMK EPS Condolence