#BigBreaking || அதிமுகவை கைப்பற்றுவோம் - சற்றுமுன் சசிகலா வெளியிட்ட அறிவிப்பு.!
sasikala statement march 2022
அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தொண்டர்களின் ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். இயக்கத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முழக்கம் வீண் போகாத வகையில் பணியாற்றுவேன்" என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சோதனைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்து கழகத்தை, கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, உறுதியாக இருந்து ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் கழகத்தை காப்பேன். என்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று புரட்சித்தலைவி அம்மா எப்படி மக்களுக்காகவே வாழ்ந்தாரோ., அதே வழியில் நானும் வாழ்வேன் என்று சசிகலா உறுதியளித்திருக்கிறார்.
English Summary
sasikala statement march 2022