பஞ்ச ராஜ்ஜிய பரிபாலனம் எங்கும் ஓங்கும்’...! - கமல் ஹாசன் கவிதையில் சாடிய பட்ஜெட் - Seithipunal
Seithipunal


பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 9வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே ஆளும் கட்சி அதிரடி வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினர் அதே நேரத்தில் கடுமையான விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில், நடிகர் மற்றும் எம்.பி. கமல் ஹாசன் தனது தனித்துவமான பாணியில் மத்திய பட்ஜெட்டை விமர்சித்துள்ளார். அவர் X தளத்தில் பகிர்ந்த பதிவில், தமிழ் கவிதைப் பாணியில் பட்ஜெட்டை சாடியுள்ளார்.“எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவருடைய கற்பனை அன்றே இந்திய பட்ஜெட்டின் நிலையைப் புலம்பியதாக இருந்தது. நான் அதற்கு ஊக்கம் பெற்றவன். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பட்ஜெட்டைக் கண்டு நானும் கவிதை புலம்பினேன். அப்போது நினைவில் வந்தது:
‘கள்ளிச் செடி பசுவாகிப்
பால் சுரக்கும்
வேப்பம்பூத் தேனெடுக்கும்
பண வண்டு
வறுமைக் கதிர் அறுக்கக்
கானல் நீர் வாய்க்கால்கள்
கற்பனை அறுவடையில்
கனவு நெல் மணிகள்
தெருவோர ஜமீன்தார்கள்
வரி செலுத்த
பஞ்ச ராஜ்ஜியப் பரிபாலனம்
எங்கும் ஓங்கும்’
இந்தியாவை பொருத்தவரை எந்த பட்ஜெட்டும் முழுமையாக நியாயமில்லை; இருப்பினும், எங்களது வரிகள் எப்போதும் அதில் பொருந்தும் போல உள்ளது,” என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rule five kingdoms prevail everywhere Kamal Haasan poem criticizes budget


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->