இன்று சாதா தைப்பொங்கல் இல்லை.! சிறப்பான அரசியல் பொங்கல்.!
RAHUL JP NATTA IN TN PONGAL
தமிழகம் முழுவதும் இன்று தைப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் தைப்பொங்கல் உற்சாகமின்றி காணப்பட்ட இருந்தாலும் பல்வேறு பகுதிகளில் தைப்பொங்கல் வழக்கம்போல கொண்டாட்டத்துடன் வழக்கமான கொண்டாட்டங்கள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்பட்டது இதேபோல்
அரசியல் கட்சித் தலைவர்களும் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்களது தேர்தல் பிரச்சார உத்திகளை இந்த தைப்பொங்கலில் சிறப்பாக நிறைவேற்றி உள்ளனர். அதில், குறிப்பாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் -பாஜக தலைவர்கள் தமிழகத்துக்கு வருகை தந்து இந்த பொங்கலை அரசியல் பொங்கலாக சிறப்பித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பின் அவனியாபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவிலும் கலந்து கொண்டார்.
இதேபோல், பொங்கல் விழாவை முன்னிட்டும், துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவை முன்னிட்டும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகம் வந்தார்.
English Summary
RAHUL JP NATTA IN TN PONGAL