பிகார் தேர்தல் தோல்வி: பிராயச்சித்தமாக காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மௌன விரதம்!
Prashant Kishor silent fast Mahatma Gandhi Ashram in Bihar
பிதிஹர்வா, பிகார்: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பிராயச்சித்தமாக, கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் (PK) இன்று (நவம்பர் 20, வியாழக்கிழமை) ஒரு நாள் மௌன விரதம் மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும், நான்கு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தோல்விக்கு 100 சதவீதப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக பிரசாந்த் கிஷோர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
மௌன விரதம்:
தோல்விக்குப் பிராயச்சித்தம் தேடும் விதமாக, மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் இன்று அவர் மௌன விரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரோடு மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட முக்கியக் கட்சி நிர்வாகிகளும் இந்த விரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி மௌன விரதம் மேற்கொண்ட அதே இடத்தில்தான், பிரசாந்த் கிஷோரும் தனது விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த இடத்தில்தான் ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்குவதற்கு முன்னதாக, பிரசாந்த் கிஷோர் தனது முக்கியமான 3,500 கி.மீ. நடைப்பயணத்தையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Prashant Kishor silent fast Mahatma Gandhi Ashram in Bihar