#BigBreaking || நடிகர் ஷாருக்கான் வீட்டில் நுழைந்த போதை பொருள் தடுப்பு போலீஸ்.! முக்கிய நடிகை வீட்டிலும் ரெய்டு.!
police in SHARUK KHAN
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஷாருக்கான் வீட்டில் சற்றுமுன் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உல்லாச கப்பல் என்று அழைக்கப்படும் 'எம்பிரஸ்' கப்பலில் டெல்லியை சேர்ந்த 'ஃபேஷன் டிவி இந்தியா’ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்ததது. இதில், சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தியதை கண்ட கப்பல் அதிகாரிகள், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, போதை தடுப்பு அதிகாரிகள் அந்த கப்பலில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியனும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 8ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே, நேற்று நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் தர மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, அவரின் மனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் இல்லத்திற்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் இன்று ஒரு குழுவாக சென்று உள்ளனர்.
மேலும் இந்த போதை பொருள் வழக்கு சம்பந்தமாக ஷாருக்கான் இடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், இந்த வழக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்ல அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமில்லாமல் நடிகர் ஷாருக்கானின் மகன் உடன் தொடர்புடைய மும்பையில் உள்ள நடிகை அனன்யா பாண்டே இல்லத்துக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்றுள்ளனர். அங்கும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கிறது.