அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய த.பெ.தி கழகத்தினர் 123 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரிக்கு வருவதை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமிதாஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 123 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீட், இந்தித்திணிப்பு, பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அறிவித்தனர்.

அதன்படி, வீர மோகன் தலைமையில் புதுவை பெரியார் சிலை அருகே ஒன்றுகூடி கையில் கருப்பு கொடியுடன் அமித்ஷாவை திரும்பப் போக வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும், அமித்ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 123 பேரை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

POLICE ARREST THANTHAI PERIYAR THIRAVIDA KALAKA MEMBERS


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->