#Breaking : பாமகவின் போராட்டத்தால் சற்றுமுன் முன் வெளியான அறிவிப்பு .! - Seithipunal
Seithipunal


வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாமகவினர் தமிழகம் முழுவதும் இன்று சென்னையை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

பாமகவினர் கார்களிலும். பேருந்துகளிலும். இரு சக்கர வாகனங்களிலும். வேன்களிலும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையின் 8 நுழைவாயிலில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டு பாமகவினரை தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். சிலர் ஒரு சில இடங்களில் கைது நடவடிக்கையும் போலீசார் எடுத்து உள்ளது.

தாம்பரம், சேலையூர் அருகே பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பாமகவினர் சாலையை மரித்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. தாம்பரம் சேலையூர் அருகே சுமார் மூன்று மணி நேரமாக பாமக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் அவர்களை சென்னை செல்ல அனுமதிக்கவில்லை.

இதேபோல், பெருங்களத்தூர் அருகே இன்று காலை பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. பாமகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் வந்து இருந்ததால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை உருவாகியது.

இந்நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாமகவினர் ரயில் மார்க்கமாக சென்னையில் நுழைய முற்படுவதால் சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk protest vanniyar ida othukeedu


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->