பிரசாரத்திற்கு தயாராகும் மோடி..! உற்சாகத்தில் தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

கேரளாவில் 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜ.க கட்சி அறிவித்துள்ளது. மீதமுள்ள வேட்பாளர்கள் குறித்த விவரம் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக கேரளா வந்து, வருகின்ற 15 மற்றும் 17ஆம் தேதிகளில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் பாலக்கா.டு ஆலந்தூர் தொகுதியில் ரோட்ஷோவில் பங்கேற்று மக்களை நேரடியாக சந்தித்து பா. ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்ட உள்ளார். 

இதனால் கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அடுத்தடுத்து பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து சென்றபடி இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மீண்டும் வரவுள்ளது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm Modi campaign Kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->