இந்தியாவில் "இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிகரிக்க மாட்டார்கள்" ஓவைசி அதிரடி பேட்டி!
Owaisi Debunks Population Myths Slams Pakistan
தெலங்கானா நகராட்சித் தேர்தலை முன்னிட்டு நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆவேசமாக உரையாற்றினார்.
மக்கள் தொகை குறித்த விளக்கம்:
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் இந்துக்களின் எண்ணிக்கையை மிஞ்சாது என்று ஓவைசி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தானாகவே நிலைபெறும் (Stabilize). மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்" எனக் கூறும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்தைச் சாடிய அவர், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் பேசும் அரசியல்வாதிகள் இப்போது நாட்டின் எதிர்கால 'வயதான' மக்கள் தொகையைக் கண்டு அஞ்சத் தொடங்கியுள்ளனர் என்றார்.
மேலும், பிரதமர் மோடியின் "இளம் இந்தியா" கருத்துக்குப் பதிலளித்த அவர்: நாட்டின் 60 சதவீதத்தினர் 40 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்குப் பிரதமர் என்ன செய்தார்? இன்னும் 20-30 ஆண்டுகளில் இந்த இளம் தலைமுறை வயதாகும்போது, பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சுமைகளை நாடு எப்படிச் சமாளிக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை அரசிடம் இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணித்ததை ஓவைசி கடுமையாக விமர்சித்தார். "அந்த 'பயனற்ற' பாகிஸ்தான் அணி விளையாட விருப்பமில்லை என்றால் ஏன் இங்கு வர வேண்டும்? அவர்களை 'இங்கிருந்து வெளியேறுங்கள்' என்று சொல்லும் துணிச்சல் இந்தியாவுக்கு வேண்டும்; ஆனால் நாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்."
English Summary
Owaisi Debunks Population Myths Slams Pakistan