ஓ பன்னீர் செல்வத்தை துயரத்தில் ஆழ்த்திய மரணம்..!! - Seithipunal
Seithipunal


தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பிடிசி குடியிருப்புப் பகுதியிலுள்ள வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ், ஏழுமலை ஆகியோர் கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், இவர்கள் மறைவிற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில், சென்னை, தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பிடிசி குடியிருப்புப் பகுதியிலுள்ள வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த திரு.ராஜேஷ், திரு.ஏழுமலை ஆகியோர் கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops Mourning mourning for tambaram 2 death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->