உள்ளாட்சி தேர்தல் : அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் அழைப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை டிசம்பர் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அதிமுக  தலைமை அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைமை வெளியிட்ட அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்,  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps called admk district secretaries and mla mp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->