#BigBreaking || தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்.! சிக்கலில் சிக்கிய எடப்பாடி தரப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கான தேதியை இப்போதே நீங்கள் அறிவிக்க வேண்டும். அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார். 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் உள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

அவரின் அந்த மனுவில் பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்து, பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வருகின்ற 11ஆம் தேதி நடத்த உள்ள பொது குழுவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் பன்னீர்செல்வம் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

மேலும், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என்றும் அந்த மனுவில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops appeal to EC ADMK EPS issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->