ஆன்லைன் ரம்மி தடை வழக்கு : உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால், இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்து, தற்கொலை செய்து கொண்டதால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்த தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் மனுத்தாக்கல் செய்தன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு சார்பில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மனுவுக்கு, ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், இந்த வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online Rummy Ban case Sc Order


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->