'ஒரே நாடு ஒரே தேர்தல்'.. ஆதரவு தெரிவித்த ஒபிஎஸ் - ஈபிஎஸ்.!
One nation one election OPS and EPS support
மத்திய அரசு நாடு முழுவதும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை நடத்த முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இதற்காக இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த டிசம்பர் 23ம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் பதில் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
![](https://img.seithipunal.com/media/eps admk 1-94uyj.png)
அதன்படி அதிமுகவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி கே பழனிச்சாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.
அதன் அடிப்படையில் மத்திய சட்டத்துறை ஆணையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிமுகவுக்கு முழு சம்மதம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/ops kljsdflkgdr.jpg)
அதனை தொடர்ந்து, ஓபிஎஸ் அவர்களும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் ஜெயலலிதா ஆதரித்த திட்டம். இதனை அதிமுக என்றைக்கும் ஆதரிக்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.
English Summary
One nation one election OPS and EPS support