நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா வழக்கு; மாமியாரான முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங்கை கைது செய்துள்ள சிபிஐ..! - Seithipunal
Seithipunal


நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா கடந்த மே 12-ஆம் தேதி, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்​டில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். 

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மே 15-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அதே நாளில், ட்விஷா சர்மாவின் மாமியார் கிரிபாலா சிங்குக்கு போபால் விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ட்விஷா சர்மாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் நீதிபதியான கிரிபாலா சிங்குக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று  நள்ளிரவு ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா; ட்விஷா சர்மா மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவரது மாமியாரான கிரிபாலா சிங் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவர் மீது தீவிர குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அதன் தீவிர தன்மையை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கத் தவறியுள்ளது. எனவே, கிரிபாலா சிங்குக்கு அளிக்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுவதாக உத்தரிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்கையில், 'ட்விஷா சர்​மா​வின் மாமியாரும், ஓய்​வு ​பெற்ற கூடு​தல் மாவட்ட நீதிப​தி​யு​மான கிரிபாலா சிங், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நடை​பெற்ற திரு​மணத்​தின்​ போது ரூ.2 லட்​சம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்​தி​யுள்​ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்​படி ரூ.2 லட்​சத்தை கொடுத்​துள்​ளதாகவும்,திரு​மணம் முடிந்த ஒரு சில மாதங்​களி​லேயே ட்விஷாவுக்கு அவரது கணவர் சமர்த் சிங் மற்​றும் மாமி​யார் கிரி​ பாலா சிங் ஆகியோ​ரால் கடுமை​யான மன உளைச்​சல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திரு​மணத்​துக்​குப் பிறகு ட்விஷா​வின் அடிப்​படை தேவைகளுக்​குக் கூட அவரது கணவரும் மாமி​யாரும் பணம் கொடுக்க மறுத்​துள்​ளதாகவும், இதனால், ட்விஷா​வின் பெற்​றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளதாக முதல் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Judge Kiribala Singh the mother in law of actress and model Twisha Sharma has been arrested in connection with the case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->