கைது செய்யப்படுகிறாரா சீமான்! உயர்நீதிமன்ற உத்தரவு, பாயும் வழக்குகள்! - Seithipunal
Seithipunal


பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், சமூகநீதி, பெண்விடுதலைக்காக போராடிய பெரியார் குறித்து சீமான் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும், அவரின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். 

மேலும், சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற கூறியிருந்தார். இந்த வாழ்க்கை விசாரணை செய்த நீதிபதி நிர்மல் குமார், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் சீமான் பேசியிருக்கிறார்.

மனுதாரரின் புகாரை ஏற்றுக்கொண்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து வருகின்ற 20ஆம் தேதிக்குள் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே மதுரை, கடலூர் மாவட்டம் வடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் சீமான் மீது உள்ள பழைய வழக்குகளை போலீசார் தூசி தட்டி எடுத்து வருவதாகவும், இன்று இரவு சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Periyar issue Court order


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->