சூடுபிடிக்கும் அரசியல் களம்: பிரசாரத்தை தொடங்கும் சீமான்.! முழு விவரம் இதோ...  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிடுகிறார். 

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் தீவிர பிரசாத்தில் ஈடுபட உள்ளார். 

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து 29ஆம் தேதி தென்காசி, விருதுநகர், 30-ஆம் தேதி ராமநாதபுரம், 31ஆம் தேதி சிவகங்கை, மதுரை ஏப்ரல் 1ஆம் தேதி திண்டுக்கல், 2ஆம் தேதி கரூர், திருச்சி செல்ல உள்ளார். 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் வாகனங்கள் மூலமாகவும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வாக்குகளை சேகரிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seaman election campaign


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->