மக்களே., இனி இப்படி செய்தால்., 5 ஆண்டுகள் சிறை, 76 ஆயிரம் அபராதம்.! மத்திய அரசு அதிரடி.!
new law for animals safety
செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை அடித்து துன்புறுத்தினார் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்திருத்தம் விரைவில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை அடித்து துன்புறுத்தி கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகிறது. இப்படி செய்பவர்களை தண்டனை விதிக்க ரூபாய் 50 ரூபாய் மட்டும் தான் உள்ளது. இது தான் கடந்த 60 ஆண்டுகளாக வழங்கப்படும் தண்டனை ஆகும்.
கடந்த 60 ஆண்டுகளாக விலங்குகளை துன்புறுத்தும் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான வரைவு ஒன்றையும் தயாரித்து உள்ளது. மத்திய அரசு தயாரித்துள்ள அந்தப் புதிய வரைவில்.,
இனி விலங்குகளை காயப்படுத்துதல் அல்லது கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ரூபாய் 75 ஆயிரம் அபராதம் அல்லது விலங்குகளின் மதிப்பில் மூன்று மடங்கு அபராதத் தொகையாக விதிக்கப்படும்.
மேலும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதற்கான புதிய சட்டத்திருத்தம் விரைவில் மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
English Summary
new law for animals safety