காறி துப்பினா என்ன கெட்டுரும்... மக்கள் (சமூகம்) சரியில்லை... தொடர் பாலியல் குற்றங்களுக்கு காரணம் சொன்ன கமலஹாசன்!
MNM Kamalhaasan condemn to pepole for woman safty
மாநிலங்களவை உறுப்பினர் நடிகர் கமலஹாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Kamalhaasan condemn to pepole for woman safty