மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய புள்ளி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம்.!  - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மாநில இணைச் செயலாளர் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இணைச் செயலாளர் திரு.சுரேஷ்பாபு அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன், மேற்கண்ட மாநில இணைச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். 

மேலும், நமது மய்ய உறவுகள், இனி அவருடன் கட்சி ரீதியிலான எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"

என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mnm announce for suresh babu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->