மெரினா கடற்கரை கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மரியாதை!
MK Stalin pays homage at Karunanidhis memorial at Marina Beach
இன்று மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூத்தி ரெண்டாவது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-af97j.jpeg)
மேலும்,கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், இன்று அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாகவும், தொண்டர்களால் வெகு விமர்சயாகவும் நடத்தப் பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தனது அப்பா கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு நினைவூட்டும் வகையில் சென்றார். மேலும், அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதான் பிறகு வீட்டிலிருந்த தாயார் 'தயாளு அம்மாளை' சந்தித்து காலில்விழுந்து ஆசி பெற்றார்.பிறகு அங்கிருந்து மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதுமட்டுமின்றி,கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் கலைஞர் உருவம் வடிவமைக்கப்பட்டு, அதன் கீழ் செம்மொழி நாள் என எழுதப்பட்டு,ஒக்ர் நினைவாக பேனா வைக்கப்பட்டு இருந்தது.மேலும், கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்."
English Summary
MK Stalin pays homage at Karunanidhis memorial at Marina Beach