தெலுங்கானாவில் சோகம்: ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


தெலங்கானாவில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து 20 பேர் பசாராவில் உள்ள பிரபல ஞான சரஸ்வதி கோவிலில் தரிசிக்க சென்றுள்ளனர். 

இவர்கள் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு முன்பு கோதாவரி ஆற்றில் புனித நீராடியுள்ள நிலையில், ஆற்றில் வெள்ளத்தின் அளவு திடீரென அதிகரித்துள்ளதால், 05 அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் 05 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். பின்னர் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக், பரத் ஆகியோர் என பைன்சா காவல்நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் கூறியுள்ளார்.

ஆன்மிக சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

05 members of a family washed away in Godavari river floods in Telangana


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->