முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி: தமிழக பாஜ தலைவர்..!
Nainar Nagendran expresses happiness at attending Muruga devotees conference
எதிர்வரும் ஜூன் 22 -ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவும் அறுபடை வீடு மாதிரி வடிவங்கள் அமைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்துள்ளது. மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் ஜூன் 10-ஆம் தேதி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், கண்காட்சி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இன்று காலை, விழுப்புரத்தில் நடைபெற்ற கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் வரும் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் திரு. AG சம்பத் அவர்கள், மாநிலச் செயலாளரும் விழுப்புரம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான திரு. வினோஜ் அவர்கள், மாநிலச் செயலாளரும் விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான திருமதி. மீனாட்சி அவர்கள், விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் திரு. தர்மராஜ் அவர்கள், விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் திரு. K.R. விநாயகன் அவர்கள், கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மற்றும் கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் திரு. தமிழ் அழகன் அவர்கள் ஆகியோர் பங்குபெற்றனர். என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran expresses happiness at attending Muruga devotees conference